சித்திரை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

 

ருத்தணி, ஏப்.20: சித்திரை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று சித்திரை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தனம், விபூதி மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்களுடன் பட்டு வஸ்திரங்கள், தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பல்வேறு வாகனங்களில் வந்து மலைக்கோயிலில் குவிந்தனர்.

Related Stories: