நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில்

நெல்லை, ஏப்.30: நெல்லை மாநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் அனைத்துத்தரப்பினரும் உருக்குலைந்து காணப்படும் சாலைகளை மேம்படுத்துமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதும் பலனில்லை. நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோயிலில் இருந்து மேற்கு புறமாக பேட்டைக்கு செல்லும் சாலையானது பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. காட்சி மண்டபம் பகுதி சாலையான போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கரடுமுரடாக காணப்படுகிறது. இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு நாளும் நெருக்கடியிலும், குண்டும் குழியான சாலையில் ஊர்ந்து சென்றும் மிகுந்த சிரமத்துடன்தான் சென்று வருகின்றனர். ஆங்காங்கே உருவாகி இருக்கும் பள்ளங்களால் திடீரென வாகன ஓட்டிகள் காரின் குறுக்கே பாயும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது, முதியவர்கள், கர்ப்பிணிகள் இந்த சாலையில் செல்லும் போது நரக வேதனையை அனுபவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு டவுன் பகுதியில் சாலைகளை சீரமைக்க முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: