கொடைக்கானல்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜெயா நகரை சேர்ந்தவர் நயனா ரஜினிஷ் (30). இவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை பகுதியில் இயங்கும் தனியார் தியான மையத்திற்கு வந்து கடந்த சில நாட்களாக தங்கி பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதிக்கு வந்த இவர் திடீரென தண்ணீரில் குதித்தார். இதை கண்ட அப்பகுதியினர், பெண் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பதற்றமடைந்து உடனே படகு குழாம் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது அவர் தண்ணீரில் மிதந்த நிலையில் யோகா செய்தது தெரியவந்தது. அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் சிறிது மனநலம் பாதித்து இருக்கலாம் என தெரிவித்தனர். யோகா செய்வதற்கு ஏரியில் குதித்தாரா அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குதித்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
கொடைக்கானல் ஏரியில் மிதந்த பெங்களூரு பெண்
- கொடைக்கானல் ஏரி
- கொடைக்கானல்
- நயனா ரஜ்னிஷ்
- ஜெயா நகர், பெங்களூரு, கர்நாடகா
- பெருமாள்மலை
- திண்டுக்கல் மாவட்டம்
