ஜி.கே.மணி எட்டப்பன்; தமிழ்குமரன் துரோகி: அன்புமணி காட்டம்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி ஏரியூர் பஸ்நிலையம் அருகே, பாமக வேட்பாளர் பாடி செல்வத்தை ஆதரித்து அன்புமணி நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 25 ஆண்டு காலம் பாமகவின் தலைவராக (ஜி.கே.மணி) இருந்து பாராட்டு விழா நடத்தி, 5 பவுன் தங்க சங்கிலி அணிவித்து, ஓய்வெடுங்கள் என்று சொன்னோம். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பதவி வெறியால், அய்யாவிடம் சொல்லி கவுரவ தலைவர் பதவி வாங்கி விட்டார். அப்போதிலிருந்து சூழ்ச்சி செய்து, சதி திட்டம் போட்டு, என்னை பற்றி அய்யாவிடம் சொல்லி சொல்லி, அவரை ஒரு குழந்தை மாதிரி மாற்றி விட்டார். இதை பயன்படுத்தி கொண்டு ஜி.கே.மணி, தமிழ்க்குமரன் ஆகிய சூழ்ச்சிக்காரர்கள் ஒன்றிணைந்து, கட்சிக்குள் இப்படி ஒரு குழப்பத்தை உண்டாக்கினர்.

ஜி.கே.மணி அய்யாவிடம் எப்படி பேச வேண்டுமோ? அப்படி பேசுவார். சிலர் நன்றாக வேலை செய்வார்கள். ஆனால் 6 மணிக்கு மேல் போன் எடுக்க மாட்டார்கள் என்று அய்யாவிடம் சொல்வார். அப்போது, அய்யா அவர் குடிப்பவரா? அவர்கள் கட்சிக்கு வேண்டாம் என்று முடிவு எடுப்பார். இது போன்ற எவ்வளவோ பேரை கட்சியிலிருந்து வெளியேற்றி இருக்கிறார் ஜிகே.மணி. பெரியண்ணன், இன்பசேகரன் கூட இப்படித்தான் வெளியேறியவர்கள்.

ஜிகே.மணி, தமிழ்க்குமரனை கட்சியின் இளைஞர் தலைவராக, எனக்கு தெரியாமல் அய்யாவிடம் சொல்லி அறிவிக்கிறார். ஆனால், நான் தகுதி இல்லாதவன் வேண்டாம் என்று சொன்னேன். அதன் பிறகும் அறிவிக்கப்பட்டார். அய்யாவிடம் உங்களை பற்றி நான் படம் எடுக்கிறேன் என்று சொல்லி, 10 வருடமாக தமிழ்க்குமரன், அய்யாவை ஏமாற்றி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் மூலம் ஒரு ஆண்டிற்கு ரூ.2 ஆயிரம் கோடியில் படம் எடுக்கிறார்.

ஒரு ஆண்டாக என் மனதில் பாரம் இருந்தது. இது ஜிகே.மணி, தமிழ்க்குமரனால் ஏற்பட்டது. இதை எல்லாம் நான் உங்களிடம் சொல்வதால், என்னுடைய மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. தமிழ்க்குமரனுக்கு அடையாளம் கொடுத்தது இந்த பென்னாகரம் தேர்தல். கட்சியை எதிர்த்து, மாம்பழத்தை எதிர்த்து போட்டியிட உனக்கும், உன் அப்பாவுக்கும் எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை. உங்களுக்கு அடையாளம் கொடுத்தது இந்த கட்சி. எப்படி இங்கே போட்டியிடுகிறார்?. எவ்வளவு வன்மம்,. எவ்வளவு ஒரு வெறித்தனம்.

எவ்வளவு சூழ்ச்சி, துரோகம் செய்திருக்கிறார்கள். 4 முறை இந்த கட்சியில் எம்எல்ஏவாக இருந்த கட்சியை எதிர்த்து, ஜிகே.மணி தனது மகனை போட்டியிட வைத்திருக்கிறார். ஜிகே.மணி காட்டிக் கொடுப்பவர். தமிழ்க்குமரன் ஒரு துரோகி. இவ்வாறு அவர் பேசினார். அன்புமணி பேசி கொண்டிருந்தபோது, பாமகவினர் ஜி.கே.மணி உருவப்படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: