விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரேமலதா பேசுகையில், ‘‘திமுக பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்துள்ளது. இது மக்கள் போற்றும் கூட்டணி. எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் இந்த மதச்சார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும்.
திமுகதான் ஆட்சி அமைக்கும். நீங்கள் வெற்றி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஓட்டு போட நீங்கள் ரெடியா? விஜய பிரபாகரனை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். விஜயபிரபாகரன் நிச்சயமாக உங்களுக்காக சிறப்பாக பணியாற்றுவார். மகத்தான வெற்றியை தாருங்கள். விஜய பிரபாகரனை உங்களை நம்பி நான் விட்டு செல்கிறேன். அவரது வெற்றி விருதுநகர் மக்களின் வெற்றி’’ என்று தெரிவித்தார்.
