சொன்னாரு: விளையாட்டு துறையில் பதக்கங்கள் பெற்றுச் சிறந்து விளங்குபவர்களுக்குப் பரிசுகள், சிறப்பு உதவித்தொகை அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தரப்படும். மேலும், அவர்கள் ஓய்வு பெற்றபிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது.
செஞ்சாரு: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 6689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.79 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை: 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 25ல் இருந்து 50 ஆக உயர்த்தப்படும் என 28.03.2025 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், 50 விளையாட்டு வீரர்கள்/வீராங்கனையர்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணை 18.02.2026 அன்று வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் தேவைக்கேற்ப நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 75ல் இருந்து 125ஆக உயர்த்தப்படும் என 28.03.2025 அன்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில், 128 விளையாட்டு வீரர்கள்/வீராங்கனையர்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணை 18.02.2026 அன்று வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீரர் / வீராங்கனையர்களுக்கு ஓர் ஆண்டிற்கு ரூ.12 இலட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. 3 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச, ஒலிம்பிக் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற 301 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் மூலம் தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 14 குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
* தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 பேர் போட்டி
தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகளில் 716 பேர் போட்டியிடுகின்றனர். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 166 பேர் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் ெதாகுதியில் மட்டும் 79 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். கடந்த முறையும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சமாக அம்பை தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
