கரூருக்கு லேட்டா வந்தது தவறு விஜய்யிடம் குறை இருக்கிறது: உண்மையை சொல்லும் நாஞ்சில் சம்பத்

சிவகங்கையில் நேற்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று புறப்பட்டவர்கள் எல்லாம் பாதியிலேயே அடங்கி விட்டார்கள். எங்கள் தலைவர் அனுபவம் குறைந்தவர்தான். அவரிடத்தில் குறை இருக்கிறதா, என்றால் இருக்கிறது. நெல்லில் உமி இல்லையா, நீரில் பாசி இல்லையா, நிலவில் களங்கம் இல்லையா? எங்கள் தலைவருடைய வருகை உங்களை ஏன் ஆத்திரப்பட வைக்கிறது. ஏன் தனிமனித விமர்சனங்களை எல்லாம் முன் வைக்கிறீர்கள்.

இது என்ன மோசமான, மலிவான அரசியல். எங்கள் அணுகுமுறையில் குற்றம் இருந்தால் சொல்லுங்கள். கரூரில் மட்டும் ஏன் அந்தத் துயரம்? விஜய் குற்றவாளியா? அவர் தாமதமாக வந்தது தவறா? தவறுதான். தாமதமாக வந்ததற்கு யார் காரணம்? அந்த பயணத்தை விரைவுபடுத்த வேண்டியது காவல்துறையின் கடமை இல்லையா? திரும்பி போய் விட்டார் என விமர்சித்தார்கள், நான் சொல்கிறேன். அவர் திரும்பிப் போனதுதான் தீர்க்கதரிசனமான முடிவு. இவ்வாறு பேசினார்.

Related Stories: