5 சீட் வேணும்! கூலாக கேட்கும் ஏசிஎஸ்

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒன்றிய அரசோடு இணக்கமாக இருக்கக்கூடிய கூட்டணி. இந்த கூட்டணியில் 5 தொகுதிகளில் புதிய நீதிக் கட்சி போட்டியிட சீட் கேட்டுள்ளோம். பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி கலந்து பேசி, எந்தெந்த கூட்டணிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்குவார்கள்’’ என்று கூறினார்.

Related Stories: