சித்தோடு அருகே 30 அடி ஆழக்கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

பவானி : சித்தோடு அருகே 30 அடி கிணற்றில் விழுந்த மூதாட்டியை பவானி தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.சித்தோட்டை அடுத்து நல்லகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பணன் மனைவி முத்துலட்சுமி (72).

இவர், தனது வீட்டு கிணற்றின் அருகே நேற்று காலை நின்றிருந்த போது எதிர்பாராமல் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். 30 அடி ஆழமுள்ள கிணற்றில் 5 அடிக்கு தண்ணீர் இருந்ததால் காயமின்றி தப்பிய முத்துலட்சுமி கிணற்றில் உள்ள குழாயை பிடித்தபடி தத்தளித்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட உறவினர்கள் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டி முத்துலட்சுமி மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Stories: