திருநீர்மலை கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை திருநீர்மலை கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநீர்மலை பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநீர்மலை தெப்பக்குளம் ரூ.65 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், கால அவகாசம் தேவை என அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories: