டெல்லி: சீன ஆக்கிரமிப்பு பற்றி ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட விடாமல் அரசு தடுக்கிறது என ராகுல் காந்தி உரையாற்றினார். இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தை அரசு தடுத்துள்ளது. மக்களவையில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு. காங்கிரசார் தேசபக்தி இல்லாதவர்கள் என்று பாஜக உறுப்பினர் பேசியதற்கு பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.
