தேர்தல் ஆணையம் ஆதரித்தால் மட்டுமே தேர்தலில் பாஜ தன்னிறைவு பெறுகிறது: கபில் சிபல் எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: களவை எம்பி கபில் சிபல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு நவம்பரில் சத் பூஜை முடிந்திருந்த போதிலும் கர்னால், அரியானாவின் பிற பகுதிகளில் இருந்து 4 ரயில்கள் பீகாருக்கு அனுப்பப்பட்டது. அப்போது ரயில்வே அமைச்சகம் இந்த ரயில்கள் சத் பூஜைக்காக அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தது. சத் பூஜை அக்டோபரிலேயே முடிந்து விட்டது. பின்னர் எதற்காக இப்போது அங்கு ரயில்கள் விடப்படுகிறது என கேட்டேன். ரயில்களில் பயணம் செய்த பயணிகள் தங்கள் டிக்கெட் கட்டணத்தை பாஜ செலுத்துவதாக கூறும் ஒரு காணொலியை வெளியிட்டேன். அதன் பிறகு ரயில்வே அமைச்சகம் அமைதியானது. இப்போது மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது. பீகாரில் ஓட்டு வைத்துள்ள ஒருவருக்கு மேற்கு வங்கத்திலும் வாக்குரிமை உள்ளது. இரு மாநிலங்களிலும் பதிவு செய்துள்ள குறைந்தது ஐந்து வாக்காளர்களின் விவரம் எங்களிடம் உள்ளது. இதுபோன்று ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள். தேர்தல்களில் பாஜவும் தன்னிறைவு அடையவில்லை என்பது முக்கிய விஷயம். தேர்தல் ஆணையம் ஆதரிக்கும்போது மட்டுமே அது தன்னிறைவு அடைகிறது. அவர்களால் சுயமாக வெற்றி பெற முடியாது என்றார்.

Related Stories: