சும்மா சத்தம் போட்டுட்டு மைக்க ஒடைக்க போகல.. மக்கள் பிரச்னைகள் பற்றி பேசவே நான் நாடாளுமன்றம் போகிறேன்: ராகவ் சதா விளக்கம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர் ராகவ் சதா. இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவை துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் சதா நீக்கப்பட்டார். இந்நிலையில் ராகவ் சதா தன் எக்ஸ் தளத்தில் வீடியோ செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி என் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்யும்போது ராகவ் சதா(நான்) அங்கேயே இருக்கிறார் என குற்றம் சொல்லப்படுகிறது. இது அப்பட்டமான பொய்.

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தில் நான் கையெழுத்திடவில்லை என்று குற்றம் சொல்கிறார்கள். அந்த தீர்மானத்தில் கையெழுத்திடும்படி எந்த கட்சியின் எந்தவொரு தலைவரும் முறைப்படியோ, முறைசாராமலோ என்னிடம் கேட்கவில்லை. ஜிஎஸ்டி, வருமான வரி, டெல்லி காற்று மாசுபாடு, பஞ்சாப் தண்ணீர் பிரச்னை, பொது சுகாதாரம், கல்வி, ரயில் பயணிகள் பிரச்னை, மாதவிடாய் சுகாதார பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பொதுபிரச்னைகள் பற்றி நான் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி வருகிறேன். நான் வெறும் கூச்சலிட்டு, மைக்கை உடைக்கவோ, பிறரை தகாத வார்த்தைகளால் பேசவோ நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை. பொது பிரச்னைகளை பேசி தாக்கத்தை ஏற்படுத்தவே செல்கிறேன்” என்றார்.

Related Stories: