இளம் நடிகையிடம் பாலியல் அத்துமீறல் மலையாள டைரக்டர் ரஞ்சித்தை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் ரஞ்சித்.ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள இவர், 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். பல்வேறு பாலியல் சர்ச்சைகளில் சிக்கிய அவர் ஒரு புதிய மலையாள படத்தை டைரக்ட் செய்து வந்தார். இந்தப் படத்தில் நடித்து வரும் இளம் நடிகை கடந்த சில தினங்களுக்கு முன் டைரக்டர் ரஞ்சித் மீது கொச்சி போலீசில் பாலியல் புகார் கொடுத்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரவனில் வைத்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் வைத்து டைரக்டர் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் எர்ணாகுளம் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் டைரக்டர் ரஞ்சித்தை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், ரஞ்சித்தை நாளை (6ம் தேதி) வரை 3 நாள் நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

Related Stories: