யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக கூறி இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி : சாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதிகளுக்கு உயர் சாதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்​றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்​தைத் தொடர்ந்​து, அவர்​களது தாய்​மார்​கள் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், 2012ம் ஆண்​டின் பழைய விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்​யு​மாறு பல்​கலைக்​கழக மானியக் குழு​வுக்கு (யுஜிசி) உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், உயர்​கல்வி நிறு​வனங்​களில் சமத்துவத்தை மேம்​படுத்​து​வதற்​கான 2026-ம் ஆண்​டின் புதிய விதி​முறை​களை யுஜிசி கடந்த 13ம் தேதி வெளி​யிட்​டது.

யுஜிசியின் புதிய வழிமுறைகளுக்கு உயர்சாதி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்த யுஜிசி விதிமுறைகளுக்கு தடை விதிக்கக்கோரி முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த அமைப்புகள் சார்பில்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், சாதி ரீதியான பாகு​பாட்​டுக்கு ஒரு முழு​மையற்ற வரையறையை தந்துள்​ள​தாக​வும் இதன் மூலம் குறிப்​பிட்ட சில பிரி​வினருக்கு கிடைக்க வேண்​டிய நிறுவன ரீதி​யான பாது​காப்பை இது மறுப்பதாக​வும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், யுஜிசியின் புதிய விதிமுறைகளின் நோக்கம் என்ன? அதற்கான பலன் என்ன? என்பதை பார்க்க வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாகவும் கூறி யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தனர். அதே சமயம் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு வழங்க 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறையை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நிபுணர்களைக் கொண்டு புதிய விதிமுறைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்த யுஜிசிக்கும் ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டது.

Related Stories: