சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ’தலைமைச் செயலாளர் அந்தஸ்தில்’ நேற்று முன்தினம் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு முதன்மை செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1. அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி,
2. சிஜி தாமஸ் வைத்யன் ஐஏஎஸ் – பேரழிவு மேலாண்மை ஆணையர்
3. சமயமூர்த்தி ஐஏஎஸ் – மனித வள மேலாண்மை துறை செயலாளர்
4. எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ் – முதல்வரின் தனி செயலாளர்-2
5. ரீட்டா ஹரிஷ் தக்கர் – ஐஏஎஸ் பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர்
6. ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் – சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
