சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுப்பீர்கடவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அப்பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. சிறுத்தையை பிடிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு கூண்டு வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி காராச்சிக்கொரையில் உள்ள வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
பவானிசாகர் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
