இந்நிலையில், வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி புகார்தாரான காட்ப்ரே நோபிள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுசெய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஜூலை 21ம் தேதி நீதிமன்ற சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு பெற்று தான் வழக்கை முடிக்க வேண்டுமானால் காவல் துறை எதற்கு? வழக்கு விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கிறேன். அன்றைய தினம், 2024 நவம்பர் முதல் 2025 ஜூலை 21ம் தேதி வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post முன்னாள் எம்பிக்கு எதிரான வழக்கில் சம்மன் அனுப்பாத இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
