தக்கலை அருகே குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு

குமாரபுரம்: குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் சுவாமியார்மடம் பகுதியில்  சாலையோரம் உள்ள ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தபடியே வெளியேறியது. இதனால் குடிநீர் வீணாக பாய்ந்து சென்றது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: