ஊட்டி: தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கும் நிலையில், தொட்டபெட்டா காட்சி முனை வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, வரலாற்றில் இடம் பெற்றுள்ள தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவு தொட்டபெட்டா செல்வது வழக்கம்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு தொட்டபெட்டா வெறிச்சோடுகிறது
