மும்பை: படத்திலிருந்து ஆபாச காட்சியை நீக்காமல் இருப்பதற்கு நடிகைக்கு 1 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்த சம்பவம் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இது பற்றி பாலிவுட்டின் மாஜி கனவு கன்னி மாதுரி தீட்சித் இப்போதுதான் மவுனம் கலைத்து பேசியிருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் ‘நாயகன்’. இப்படம் 1987ல் வெளியானது. இதன் இந்தி ரீமேக்கான ‘தயாவான்’ படம் 1988ல் ரிலீசானது.
இதில் கமல்ஹாசன் வேடத்தில் வினோத் கன்னாவும் சரண்யா வேடத்தில் மாதுரி தீட்சித்தும் நடித்தனர். படத்தை தயாரித்து, இயக்கியவர் நடிகர் பெரோஸ் கான். தமிழில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ என்ற பாடல் காட்சியை போல் இந்தியில் ஒரு பாடலை படமாக்கினார் பெரோஸ் கான். காட்சிப்படி வினோத் கன்னாவும் மாதுரியும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போது வினோத் கன்னா அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இயக்குனர் ‘கட்’ சொன்ன பிறகும் மாதுரியுடன் நெருக்கமாக நடித்து, அவரது உதட்டை கடித்திருக்கிறார்.
ரத்தம் சொட்ட சொட்ட மாதுரி கண்ணீர் விட்ட படி அங்கிருந்து ஓடியிருக்கிறார். இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க கோரி பொரோஸ் கானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் மாதுரி தீட்சித். இது தொடர்பாக மாதுரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பெரோஸ் கான், அவருக்கு சம்பளமாக 15 லட்சம் ரூபாய் தருவதற்கு பதில் ரூ.1 கோடியை தர முன்வந்துள்ளார். அதன் பிறகே மாதுரி சமாதானம் அடைந்தாராம். இந்த தகவலை சமீபத்தில் மாதுரி தெரிவித்துள்ளார். ‘இந்த ஒரு காட்சிக்காக அப்போதே ஒரு கோடியை பெரோஸ் கான் தந்தாரா’ என ேகட்டு நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.