அதில் அவர் பேசும்போது, ‘‘என்னுடன் நடித்த காமெடி நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தவறான முறையில் சிக்னல் காட்டினார். அப்போது படப்பிடிப்பு தடைப்படும் என்பதால் அங்கு எதுவும் பேசாமல் இருந்தேன். பிறகு கேரவனுக்கு அந்த நடிகரை அழைத்து நான் ஏதாவது உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா அல்லது வேறு ஏதாவது தவறான முறையில் நடந்து கொண்டேனா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். பிறகு ஏன் நீங்கள் எனக்கு அப்படி சிக்னல் கொடுத்து கீழ்த்தரமான செயலை செய்தீர்கள் என்று கேட்டேன். இது உங்களுக்கு வெட்கமா இல்லையா? அடுத்த முறை இப்படி பொறுமையாக பேசமாட்டேன் என சொன்னேன்’’ என்றார். அந்த காமெடி நடிகர் யார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.