திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

 

திருவெறும்பூர், ஜூன் 13: திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் மருதை. இவரது மகன் வெங்கடேசன் (46). இவர் அந்த பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் தனது பட்டறையில் வெல்டிங் வேலை பார்த்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் வெங்கடேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே வெங்கடேசனை அங்கு வேலை பார்த்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையும் பின்னர் திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் மேல் கட்ட சிகிச்சையும் அளித்ததோடு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசனை பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

The post திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கி வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: