தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. தடை விதிப்பால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.