கரூர், மே. 23: கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் அனைத்து பகுதிகளில் இருந்தும் 330 மனுக்கள் வந்துள்ளன
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கருர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், புகளூர், குளித்தலை, கடவூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்வு நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கரூர் தாலுகா அலுவலகத்தில் 27 மனுக்களும், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் 34 மனுக்களும், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் 26 மனுக்களும், புகளுர் தாலுகா அலுவலகத்தில் 37 மனுக்களும், குளித்தலை தாலுகா அலுவலகத்தில் 87 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் 64 மனுக்களும், கடவூர் தாலுகா அலுவலகத்தில் 55 மனுக்களும் என 7 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் நேற்று ஒரே நாளில் 330 மனுக்கள் வந்துள்ளன.
The post கரூர் ஜமாபந்தியில் 330 மனுக்கள் வருகை appeared first on Dinakaran.