வாங்கல் பகுதியில் பாசன வாய்க்காலில் செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை

 

கரூர், ஜூன் 13:கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் செடி கொடிகள் படர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளை ஒட்டி விவசாயிகளின் நலன் கருதி பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இது போன்ற பாசன வாய்க்கால் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதி வழியாக செல்கிறது.

இந்த வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் செடி,கொடிகள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி தூர்வாரவேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி செடி, கொடிகள் படர்ந்துள்ள வாய்க்காலை தூர்வார தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாங்கல் பகுதியில் பாசன வாய்க்காலில் செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: