தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து ஒருமாதம் நிறைவு பஹல்காமில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உள்ளூர்வாசிகள்

பஹல்காம்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரான் பள்ளதாக்கு பகுதியில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம்சாட்டிய இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஒருமாதம் முடிவடைந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வராததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி நசீர் அகமது கூறுகையில், “பஹல்காமில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து இருப்பார்கள். இப்போது தீவிரவாத தாக்குதல் நடந்து ஒருமாதமான பிறகும் வௌிஇடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வராததால் பஹல்காம் வெறிச்சோடி போயுள்ளது. இது பஹல்காம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள கடைக்காரர்கள், டாக்சி ஓட்டுநர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது என்றார்.

The post தீவிரவாதிகள் தாக்குதல் நடந்து ஒருமாதம் நிறைவு பஹல்காமில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உள்ளூர்வாசிகள் appeared first on Dinakaran.

Related Stories: