அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் இன்று திறப்பு..!!

ஸ்ரீ ரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  சிதம்பரம், ஸ்ரீ ரங்கம், தி.மலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9 ரயில் நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

The post அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்கள் இன்று திறப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: