இந்நிலையில் தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கத்தினர் கப்பல் போக்குவரத்து துறை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், ‘தோணிகளில் தற்போது அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று காலநிலையால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. எனவே தூத்துக்குடி – கொழும்பு, தூத்துக்குடி – மாலத்தீவு இடையே ஆண்டு முழுவதும் தினசரி தோணி போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை பரிசீலித்த ஒன்றிய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உரிய நிபந்தனைகளுடன் அனைத்து பருவ காலங்களிலும் தோணி போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி- கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து ஆண்டு முழுவதும் அனைத்து பருவகாலங்களிலும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி – மாலத்தீவு இடையே தோணி போக்குவரத்து ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு வந்தது. இதனை மே மாதம் 15ம் தேதி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தோணி தொழில் புத்துயிர் பெறும் என்று நூற்றுக்கணக்கான தோணி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post தூத்துக்குடி – கொழும்பு இடையே தினசரி சரக்கு தோணி போக்குவரத்து: ஒன்றிய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி appeared first on Dinakaran.