சின்னசேலம், ஜூன் 12: சின்னசேலத்தில் 9 மாத கர்ப்பிணி திடீரென இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (39). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் (30) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது வெள்ளையம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நேரத்தில் இவர் சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த வெள்ளையம்மாள் மீண்டும் மயக்கம் வருவதாக கூறி நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வெள்ளையம்மாளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து பெரியசாமி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சின்னசேலத்தில் 9 மாத கர்ப்பிணி திடீர் சாவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.