ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. உதவி பொறியாளர் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல் பதவிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. கணினி வழித் தேர்வு ஆக.4 முதல் 10ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.