குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை ஒருவர் மீது வழக்குப் பதிவு; போலீசார் விசாரணை

கரூர் மே 21: கரூர் காமராஜ் ரோடு அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசாரும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ். பி உத்தரவின்பேரில் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்

The post குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை ஒருவர் மீது வழக்குப் பதிவு; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: