கிருஷ்ணகிரி, மே 21: கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் அதிகாரிகள், ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாலகுறி கூட்ரோடு அருகே சென்றபோது, அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற டிராக்டரில் சோதனை செய்தனர். அதில் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.