வனத்தையொட்டி நிரம்பி வழியும் தடுப்பணை

ஓமலூர், மே 21: ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழைக்கு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஓமலூர் அருகே வனப்பகுதியில் உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஏற்காடு மலையில் இருந்து உற்பத்தியாகும் தண்ணீர் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓமலூர் அருகே உள்ள சர்க்கரைசெட்டிப்பட்டி கிராமத்தையொட்டி வனப்பகுதியில் கிழக்கு சரபங்கா ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தடுப்பணை நிரம்பி வழிவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வனத்தையொட்டி நிரம்பி வழியும் தடுப்பணை appeared first on Dinakaran.

Related Stories: