சேலம், மே 21: சங்ககிரி அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்ைக விசாரித்த நீதிபதி ஜெயந்தி, 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சதீஷ்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
The post 10 வயது சிறுமியிடம் சில்மிஷம்; வாலிபருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.