பாலக்காடு, மே 20: பாலக்காடு மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு முதலிடம் என்றும் உள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் தற்போது நவீன வசதிகள், புதியமுறைகள், மருந்து மாத்திரைகள், டானிக்கள் ஆகியைவை இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாவே ஆயுர்வேத சிகிச்சை படிப்புக்காக அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து படித்து பயனடைந்து வருகின்றனர். இவர்கள் மூலமாக நோயாளிகளும் அதிகபட்சமாக பயனடைந்து வருகின்றனர். அரசு ஆயுர்வேத மருத்துவமனைகளில் உள், வெளி நோயாளிகள் அதிக பட்சம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்தில் தலைமை தாங்கினார். பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நாஷணல் ஆயுஷ் மிஷன் ஒருங்கிணைப்பில் புதியதாக அமைக்கப்பட்ட வெளி நோயாளிகள் கட்டிடத்தையும், ஸ்பெஷாலிட்டி கிளினிக்களான ஸ்போர்ட்ஸ் ஆயுர்வேதம், பெண்கள் பிரிவு, குழந்தையினர் பிரிவு, லேப் ஆகியவற்றை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்.பி., வி.கே.ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ., சாந்தகுமாரி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள், மாவட்ட கலெக்டர் பிரியங்கா, பாலக்காடு நகராட்சி தலைவர் ப்ரமீளா சசீதரன் மற்றும் கிராம மக்களும் பங்கேற்றனர்.
The post பாலக்காடு மாவட்ட ஆயுர்வேத மருத்துவமனை புதிய கட்டிடத்தை அமைச்சர் வீணா ஜார்ஜ் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.