விஷவாயு தாக்கி 2 தொழிலாளி சாவு

பல்லடம்: பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையில் நேற்று சாயக்கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30), வேணுகோபால் (31), ஹரி (26), சின்னச்சாமி (36) ஆகியோர் 6 அடி ஆழ தொட்டிக்குள் இறங்கினர். சிறிது நேரத்தில் சின்னச்சாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே வெளியே வந்துள்ளார். மற்ற 3 பேரும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். திடீரென 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர். சக தொழிலாளர்கள் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சரவணன், வேணுகோபால் உயிரிழந்தனர்.

The post விஷவாயு தாக்கி 2 தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: