குடியாத்தம், மே 20: ஏரியில் நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார். குடியாத்தம் அடுத்த முன்னாப் டிப்போ பகுதியை சேர்ந்தவர் மகாயூப் (33),கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று அவரது நண்பர்களுடன் குடியாத்தம் ஏரியில் மீன் பிடிக்க சென்று உள்ளார். அப்போது, ஆழம் அதிகமாக உள்ள பகுதியில் மீன் பிடிக்க நீரில் இறங்கிய போது, நீச்சல் தெரியாமல் தத்தளித்து நீருக்குள் மூழ்கி உள்ளார். இதனைபார்த்த சக நண்பர்கள் நீச்சல் தெரியாததால் குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அவரை சடலமாக மீட்டனர். தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது appeared first on Dinakaran.