இந்நிலையில், மூணாறில் தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க கேரளா மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள ரவிகுளம் தேசியப் பூங்கா, மாட்டுப்பெட்டி டேம், குண்டளை அணைக்கட்டு மற்றும் படகு சவாரி மையங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதனால், சுற்றுலா தொழிலைச் சார்ந்து வாழும் வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post தென்னகத்து காஷ்மீரான மூணாறில் கோடை சீசனை அனுபவிக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.