முன்னதாக இன்று காலையில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காலை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. திமிலை உயர்த்தி தீரம் காட்டிய காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
சில காளைகள் யாருக்கும் பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பித்தளை குத்துவிளக்கு, சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஏராளமான கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
The post திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.