மும்பை: இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், தென் ஆப்ரிக்கா வீரர் ரையான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் லீக் சுற்று போட்டிகளில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 2 லீக் போட்டிகளில் ஆடவுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி மீதமுள்ள லீக் போட்டிகளில் வென்று முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று முதல், போட்டிகள் துவங்க உள்ளன. அதனால், வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் மீண்டும் ஐபிஎல்லில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், மும்பை மோதவுள்ள லீக் போட்டிகளில் மட்டும் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். அதன் பின், வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகளில் பங்கேற்க அவர் சொந்த நாடு திரும்பி விடுவார். அதேபோல், மும்பை அணியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா வீரர் ரையான் ரிக்கல்டனும், லீக் போட்டிகளில் மட்டும் ஆடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஆடும் பட்சத்தில், மாற்று வீரர்களாக விளையாடுவதற்கு, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரை மும்பை அணி நிர்வாகம் அணுகி உள்ளது.
The post நிம்மதி பெருமூச்சு விடும் நிர்வாகம்: மும்பை அணிக்கு திரும்பும் வில் ஜாக்ஸ், ரிக்கல்டன் appeared first on Dinakaran.