தர்மபுரி, மே 17: பென்னாகரம் மிட்டாதார தெரு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரேவதி (33). இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டு தகராறு ஏற்பட்டது. அப்போது ரேவதி கோபித்துக்கொண்டு, தனது தாய் வீட்டிற்கு செல்வதாக, மகனை அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால் அவரது தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவக்குமார் பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 9 வயது மகனுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.