சென்னையில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே அலுவலகத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை. மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை மோசடி என சோதனை நடத்திய அமலாக்கத் துறை முன்பு கூறியிருந்தது. டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த மாதம் மார்ச் 6-ம் தேதியிலிருந்து 3 நாள்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

 

The post சென்னையில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: