கோடையை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புக்கு முன்பதிவு: இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்

சென்னை: கோடை விடுமுறையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளாக சென்னை ஒரு நாள் சுற்றுலா, பாண்டிச்சேரி ஒரு நாள் சுற்றுலா மற்றும் மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா இடம் பெற்றுள்ளது என இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் சுற்றுலாவில் உலக புகழ்ப்பெற்ற குடைவரை கோயில்கள், குறிப்பாக முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பலதரப்பட்ட மிதவைப்படகுகள் இயக்கி வருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சொகுசு கப்பல் உணவகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு நாள் மாமல்லபுரம் சிறப்பு சுற்றுலாவிலும் இந்த சொகுசு கப்பல் தொகுப்பை சேர்த்து சுற்றுலா இயக்க உள்ளது.

மேலும் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமை 1 மணி நேரம் சவாரி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை மணி நேரம் சவாரிகளிலும் விடுமுறை நாட்கள் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி படகு சவாரி செய்யவும் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் www.ttdconline.com என்ற வலைதளத்தில் சொகுசு கப்பல் படகு சவாரியை முன்பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

The post கோடையை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புக்கு முன்பதிவு: இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: