இம்பால்: இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லைக்கு அருகே மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவு துறைக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் கீழ் உள்ள அசாம் ரைபிள்ஸ் படையினர் அங்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான பதிலடியை கொடுத்தனர். வீரர்களின் இந்த அதிரடியில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருகின்றது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி appeared first on Dinakaran.