கிருஷ்ணகிரி, மே 13: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 268 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.