சாமியாரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கட்சேகுடா பகுதியில் இதே போன்று தண்டவாள இணைப்புகளில் கற்கள் வைத்துள்ளார். கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, மேல்பாக்கத்தில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த சாமியார்தான் மற்றொரு இடத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சித்தது அம்பலம் ஆகியது. இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், ஹரிதுவாரை அடுத்த ஹரிப்பூர் காலன் அருகே கங்கை நதி ஓரத்தில் வசித்து வந்த ஓம்(50) என்ற அந்த நபரை தமிழ்நாடு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.
The post அரக்கோணம் அருகே கற்கள், இரும்பு போல்ட்டுகள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது appeared first on Dinakaran.