சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி நபரை கண்டறிந்தனர். மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ்(32) என்பது தெரிய வந்தது. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், புதுவை மட்டுமின்றி, நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று சுமார் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் வழக்கு பதித்து சென்னை சோழிங்கநல்லூரில் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப்கள், ஒரு கார், ரூ.7 லட்சத்து 60 ஆயிரம், மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் படித்து முடித்தவுடன் இதேபோல் மோசடி டிரேடிங் கம்பெனியில் வேலையில் சேர்ந்துள்ளார். அதில் இருந்து கற்றுக் கொண்டு சென்னையில் தனியாக நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
The post ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை ஏஐ செயலி விற்பதாக கூறி ரூ. 3.5 கோடி மோசடி: சென்னை இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.