அப்போது பைக்குகளில் வந்த 4 பேர் தங்கப்பாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தினர். நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது கழுத்தை அறுத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடனே லோடுமேன்கள், கடை ஊழியர்கள் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர்.
அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டியபடி அவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்கு பதிந்து நிரஞ்சன் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் பிடிபட்ட நிரஞ்சனின் சகோதரர் திருட்டு வழக்கில் சிறைக்கு செல்ல தங்கப்பாண்டியின் சகோதரர் ஆனந்த் தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் ஆனந்திற்கு பதிலாக தங்கப்பாண்டியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் காதல் விவகாரத்தில் இருவருக்கும் முன்விரோதம் இருந்ததும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுரை மார்க்கெட்டில் அதிகாலையில் பரபரப்பு காதல் விவகாரத்தில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை appeared first on Dinakaran.