பெண் காவலருக்கு கொலை மிரட்டல் மீனவர் கைது

சோழிங்நல்லூர்: சென்னை தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் வி.பி.கோயில் தெரு சந்திப்பில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மதுபோதையில் தன்னுடைய மகனுக்கு அபராதம் விதித்ததாக கூறி பெண் காவலரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர் அந்த நபரை கண்டித்துள்ளார். அப்போது, அவரையும் அவதூறாக பேசி உள்ளார்.

இதுதொடர்பாக பெண் காவலர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், காசிமேடு சிங்காரவேலன் நகர் 4வது தெருவைச் சேர்ந்த கருணாநிதி (46) என தெரிந்தது. அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பெண் காவலருக்கு கொலை மிரட்டல் மீனவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: